உலகை ஆளும் ஆண்டவா
உன்னை புகழ்ந்தே துதிக்கிறோம்
உறுதியான நல்வாழ்வை நீ
உகந்து தருவாய் யா அல்லாஹ்.
ஓதி உணர்ந்து ஒழுகவே
உண்மை நிலைகள் ஓங்கவே
நீதி நேர்வழி காணவே
ஆதியே எம்மை ஆக்குவாய்.
பாலமுனை எங்கள் ஊரிலே
பாரில் மிளிரும் மின்ஹாஜியம்
அறிவின் ஒளியாய் இலங்கவே
அருளைப் பொழிவாய் யா அல்லாஹ்.
உலகை ஆளும் ஆண்டவா
உன்னை புகழ்ந்தே துதிக்கிறோம்.





